இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
182 * அருளாளர்கள்
மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பதை மகா ஞானியாகிய தாயுமானவப் பெருந்தகை கூறுகிறார். அவருடைய நெறியில் நம்முடைய வளர்ச்சிக்குத் தேவை மெளனம். உயிர்கள் மாட்டு கருணையோடு பணிபுரிய வேண்டும். இந்த இரண்டுமே அவரது நெறியின் இரண்டு கண்களாகும் என்பதை அறிய முடிகிறது.