ரா.சீனிவாசன்
121
தவறான ஆசை. அதுதான் அவளோடு வந்திருக்கிறான் அவளுக்கு நல்லவனாக நடிக்க."
எப்படி இவ்வளவும் பேசி முடித்தேன்? நேரே எப்படி இவ்வாறு செய்திகளை நேருக்கு நேர் முகத்துக்கு முகம் சொல்ல முடியும். அதற்கு ஒரு சுமை தாங்கி தேவைப்பட்டார். அவரும் அங்குச் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார்.
"கன்னம் புளித்துப் போச்சு ஏன் என்று முன்கேட்ட பொழுது எல்லாம் நம் சகோதரர்கள் என்று சொன்னாயே! அவர்தான் இவரா?"
"அவரேதான் இவர். அப்பொழுதும் என் உறவைத்தான் சொன்னேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன். உறவை நாசமாகக்கூடாது. அதிலேதான் நம் சமுதாயக் கட்டுப்பாடு இருக்கிறது."
"அந்த உறவுக்காகத்தான் இப்பொழுது வந்தேன்" என்றான்.
"என்ன முடிவோடு வந்திருக்கிறாய். நீதான் இந்த நெக்லஸ் கொடுத்தது என்ற உண்மையை ஒப்புக்கொள். அது தான் நல்லது. நீ என்னிடம் கொடுத்தாய் என்றால் அது உனக்கு நன்மை. அவளிடத்தில் கொடுத்தாய் என்றால் உனக்கு அங்கே மேல் நிலையில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுவிடும். நீ என்னிடம் கொடுத்தாய். சகோதர பாசத்துக்காக என்று சொல். அது உனக்குப் பெருமை. இது உன் குடும்பப் பொருள். அவள் அதை மதிக்காமல் வைத்திருந்தாள். அதனால் தை எடுத்துக் கொடுத்தேன் என்ற சொல். அது அவளுக்குப் பாடமாக இருக்கட்டும். நான் உன் ஜாமீனுக்காகக் காத்து இல்லை. நீ ஜாமீன் கொடுத்து நான் வெளிவர அவ்வளவு தாழ்ந்து போகவில்லை. வழக்குப் பதிவு செய்ததே உன் மனைவி என்றால் நான் உன்னால் ஜாமீனில் வெளியே வருவேன்