45
இந்த உண்மையை விளக்கவே. வலிமை பெறுக என்று வழிகாட்டுகிறது விளையாட்டுக்கள்.
மனிதர்களை நாம் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்
போற்றுதலுக்குரியராக வாழ்பவர்கள்.
பிறரைப் போற்றி மகிழ்பவர்கள்.
போற்றும் பண்பில்லாது தூற்றித்திரிபவர்கள்.
விளையாட்டுக்களின் நோக்கமானது ஒருவனுக்குரிய உள்ளாற்றலை, உயர்ந்த திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதுதான். தனக்கிருக்கும் திறமையை, தான் வெளிப் படுத்திக்காட்ட வாய்ப்பு ஏற்படும் பொழுது அவனும் மகிழ்கிறான். அவனது ஆற்றலைக் கண்டு காண்பவர்களும் மகிழ்கிறார்கள். வாயாரப் புகழ்கின்றார்கள்.
ஆகவே, புகழால் அவன் உயர்கிறான். பிறரால் புகழப்படுகிறான்.
புகழ்கின்ற மனம் பண்பட்டவர்களுக்குத் தான் உண்டு. பண்பாடுள்ளவர்கள் பிறரைப்போற்றியும், புகழ்ந்தும், தங்களை உயர்த்திக் கொண்டு வாழும் புத்திசாலிகள். ஆகவே, விளையாட்டு உலகமானது, போற்றக் கற்றுத் தருகிறது. போற்று தலுக்கும் ஆளாக்குகிறது.
உடல் வலிமையும் மனவலிமையும் இல்லாதவர்கள் இந்த இரண்டும் இல்லாமல், தூற்றித்திரியும் தெருநாய்களாக வாழ்கின்றனர். நன்றியுள்ள நாயாக அவர்களால் இருக்க முடியாது. காரணம் அவர்களுக்குள்ளே நிறைந்து நசுக்கும்லிவுகள் தான். நோய்த்துன்பங்கள் தான்.