இந்த மண்ணுலகை ஆள்கின்ற ஆதிக்கம் படைத்த சக்திகள் இரண்டு. ஒன்று பொருள். மற்றொன்று புகழ்,
ஒன்றை வைத்து ஒன்றைப் பெற்று, இந்த இரண்டுக்குள்ளும் எண்ணியதை எல்லாமே பெறுகின்ற முனைப்பிலும் முயற்சியிலும் தான் மக்கள் மாறாத மனத்தோடு உழல்கின்றார்கள்.
வந்த சுவடு தெரியாமல் வாழ்ந்து போவது மனித வாழ்வல்ல என்பதை எல்லோரும் அறிந்தே இருக்கின்றனர்.
இருக்கின்ற காலம் வரை சிறக்கின்ற காலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் யாரும் மறப்பதுமில்லை.
அப்படி சிறப்போடும், பொறுப்போடும், மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் ஒருவர் வாழ வேண்டும் என்றால், ஒருவர் கடை பிடிக்க வேண்டிய பண்புகள் மூன்று உண்டு. அவைதான் பணிவு கனிவு துணிவு என்பனவாகும்.
பண்பாட்டின் முதிர்ச்சி பணிவு. அன்பின் முதிர்ச்சி கனிவு. ஆண்மையின் முதிர்ச்சி துணிவு. ஒருவரை வாழ் வாங்கு வாழ வைக்க இம் மூன்று பண்புகளும் முக்கியமானதல்லவா!