80
விளையாட்டுக்களில் வேகம் உண்டு. மோதல் உண்டு: ஏய்க்கும் தந்திரம் உண்டு. ஆனால், அவற்றிலெல்லாம் நேர்மையும் நீதியும், நியாயமும் இருக்க வேண்டும் என்பது தான் நியதி.
போராடத் தெரிய வேண்டும். ஆனால் அங்கே புகைச் சலோ, புன்செயல்கல்லோ நிகழக் கூடாது என்பதுதான் முறை.
இதற்காகத்தான் விளையாட்டுக்களிலே விதிமுறைகள் கடுமையாக இருக்கின்றன. அவற்றை முறையோடு பின்பற் வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கின்றன.
'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி . 'நன்னடை நல்கல் வேந்தருக்குக் கடனே' என்பது புறநானூற்று வரி.
நன்கு வாழச் செய்யும் நெறிமுறைகளைக் கற்றுத்த ரும் பொறுப்பு மன்னர்க்குண்டு.
ஆனால் நன்னடை மாறி, தீய நடைபோடுபவர்களை உடனே தண்டிக்கின்ற குணமும் மன்னர்க்கு உண்டு.
அதைத்தான் ராஜநீதி என்பார்கள்.
தவறுகளை மன்னிக்கத் தூண்டுவது மனித நீதி.
தவறுகளை உடனே தண்டிப்பது ராஜ நீதி.
இத்தகைய மனித நீதிமுறைகளையும் ஒன்று சேர்த்து பயிற்சிக்களமாக விளங்குவது தான் விளையாட்டுகளாகும்.