93
சோற்று சுகம், தேக சுகம் இவைகள் தான் 'ராஜ சுகம் என்று அறியாமைச் சேற்றிலே அறிவில்லாப் பன்றிகளாகப் புரண்டு மெய்மறந்து கிடக்கின்றார்கள் பலர். பாவம்! சக்தியை சகதியாக்கிக் கொண்டு சாய்ந்து போகின்றார்கள்.
"தன்னை அறிந்து கொள்கிறவன் தான் தலைவனா கிறான்" என்பது ஒரு பழமொழி.
தன் சக்தியை, தனது திறமையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற ஆக்க பூர்வமான காரியங்களை மேற் கொள்கிற மனிதனே, மற்றவர்கள் மதித்துப் போற்றும் மகாமனிதனாக மாறுகிறான். மாபெரும் வரலாற்றையே படைத்துக் கொள் கிறான்.
அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பினை மற்ற துறைகள் வழங்கினாலும், அவற்றிலே தலையாய இடம் வகிப்பது விளையாட்டுத் துறைதான்.
உழைக்க உழைக்கத் தான் உடல் உறுதி பெறுகிறது அழகாக மாறுகிறது. பொலிவும் பூரணத்துவமும் பெறுகிறது.
குறிப்பிட்ட நோக்கத்துடன் குன்றாத இலட்சியத்துடன் உடலால் உணர்வால் உழைக்கும் பொழுது, அவனது தேக சக்தி அளவிலா சக்தியாகப் பரிணமித்து, அற்புதமான சக்தியாகவும் பெருக்கெடுத்து, பெரும் பிரளயமாகவே பொங்கி ஓடுகிறது.
அப்படிப் பட்ட சில சான்றுகளை இங்கே நாம் காண்போம்.
1968 ம் ஆண்டு மெக்சிகோ நகரத்தில், ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. மெக்சிகோ நகரமோ கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்திருப் பதாகும்.