பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


கொண்டிருந்த பொழுது, திடீரென்று கரடி ஒன்று வந்து, அவரது கழுத்துப் பகுதியில் தனது காலினை ஊன்றியது.

ஆபத்தை உணர்ந்து கொண்ட அந்த விமானி, உடனே தாவிக்குதித்து, விமானத்தின் இறக்கையின் மேல் ஏறிக் கொண்டு தப்பித்தார். இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், அவர் உடனே உயரமாகத் தாவியது 2 மீட்டர் உயரம். அவர் அணிந்திருந்த உடை களோ, கடும் குளிரைத் தாங்கக கூடிய கனமான உடைகள்.

இந்த இரண்டுவிதமான சான்றுகளும், மனிதர்களுக் குள்ளே மறைந்திருந்து வெளிப்படும் மகத்தான சக்தியையே வலியுறுத்திக் காட்டுகின்றன.

சாதாரண நேரங்களில் மனித சக்தி அவவளவாக வெளிப்படுவதில்லை.

வேண்டியபொழுது, தேவையான தருணங்களில், ஆபத்து சூழ் நிலைகளில், தற்காப்புக்குரிய நேரங்களில் மனித சக்தி மிகுதியாக வெளிப்படுகிறது.

இந்த சோதனை நேரங்கள் விளையாட்டுக்களிலும் ஒடுகளப் போட்டிகளிலும் நிறையவே நேர்கின்றன.

குறிப்பாக உடல் நலம் உள்ளவர்கள், அதிலும் உடல் பலம், வளம் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களிடையே இப்படிப் பட்ட சக்திகள் ஏராளமாகவே வெளிப்படுகின்றன. அதற்காகத் தான் விளையாட்டுப் போட்டிகள் மனித குலத்திற்கு மகிமை மிகுந்த துணையாக இருந்து உதவுகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் விளக்குகின்றார்கள் .

எப்படி இது ஏற்படுகிறது என்பதை ஆய்வு பூர்வமாகக் காண்போம். ஓர் உலக சாதனை செய்யும் ஓடுகளப் போட்டி யாளர் ஒருவர், குறிப்பிட்ட அந்தப் போட்டி சமயத்தில்,