பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அர்த்த பஞ்சகம் திற்குச் சென்று சேவித்தால், அவன் ஆ! நம் காரியத்தை நாம் செய்யத்தவறினோமே!’ என்று தான் கழிவிரக்க முற்று நம் காரியத்தைச் செய்து தலைக்கட்டுவன; எல்லோ ருமாகத் திரண்டு போகலாம், வா' என்று அழைக் கின்றனர். (8) இங்ங்னம் பத்துப்பாகரங்களால் பத்துப் பெண்களை உணர்த்தியபடியைக் கூறியது-திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சம் குடிப் பெண்களையும் உணர்த்தியதற்கு உப லட்ணமாகும். இவற்றால் ஆயமகளின் (ஆன்மாவின்) இயல்புகளைச் சொல்லப்பட்டதை நினைத்து மகிழலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/95&oldid=739105" இலிருந்து மீள்விக்கப்பட்டது