இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
அறநூல் தந்த அறிவாளர்
திருவா சகமும் திருமூலர் சொல்லும் .
ஒருவா சகம் என்(று) உணர்’
என்பது ஔவையார் காட்டிய நல்வழி .
கவிமணி பாராட்டு
இங்ஙனம் தமிழ் நாட்டுச் சிறுவர்க்கு நல்வழி காட்டிய மூதாட்டியாரைக் கவிமணி இனிய கவியால் பாராட்டுகிறார்.
‘ஔவைக் கிழவி நம்கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை செறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி’