பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

69


குருபார் மதுரை அடைதல்

அதன் பின்னர்க் குமரகுருபார் பாண்டி நாட்டில் உள்ள சிவத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து மகிழ்ந்தார். முருகப்பெருமான் விளங்கும் திருப்பரங்குன்றத்தை அடைந்தார். அங்குள்ள திருமட்டம் ஒன்றில் தங்கினார். மதுரையில் விளங்கும் மீனாட்சியம்மை மீது பிள்ளைத்தமிழ் நூல் ஒன்றைப் பாடினார். இந்நூலை அவ்வம்மையின் சந்நிதியிலேயே அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். கவிஞரின் விருப்பத்தை மீனாட்சியம்மை அறிந்தாள். அதனை நிறைவேற்றத் திருவுளம் கொண்டாள். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் கனவில் தோன்றினாள். குமரகுருபரரின் பெருமையை அவருக்கு அறிவித்தாள். அவர் பாடியுள்ள நூலைத் தன் திருமுன்பு அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்க என்று அருள்புரிந்தாள். தாயின் இன்னருள் ஆணையைக் கேட்ட திருமலை நாயக்க மன்னர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். குமரகுருபரரை அழைத்து வருமாறு பல்லக்கை அனுப்பித் தாமும் எதிர்சென்று பெரு மகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கலானார். குமரகுருபரர் மதுரைமாநகருக்கு எழுந்தருளினார்.

.