பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அறப்போர்


 அவினாசியாரே! அமைச்சர் குழுத் தலைவர் ரெட்டியார் அவர்களே! இவர்களை ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்திய படேல் துரை அவர்களே! ஜவஹர்லால் நேரு அவர்களே! தமிழர்களாகிய நாங்கள் கட்டாய ஹிந்தி நுழைவை எதிர்த்து அறப்போர் தொடுத்து விட்டோம்! தொடுத்து விட்டோம்! தொடுத்துவிட்டோம்!"

என்ற மாதிரியில் ஒலை எழுதப்படட்டும். அவினாசி யாரும் உடனடியாக ஜெயில்களையும் காலிசெய்து வைத்துக்கொள்ளட்டும். போதுமான போலீஸ் படையையும் தயாரித்து வைத்துக்கொள்ளட்டும். பெரியார் அவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள், அடக்குமுறை எப்படி இருக்கும் என்று. தடியாலும் அடிப்பார்கள், துப்பாக்கிகளாலும் சுடுவார்கள். பக்கிங்காம் மில் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைப் பாணத்தை வீசியவர்கள் தானே இவர்கள்! அந்தத் தொழிலாளர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தானே நாமும்!

அடிக்கட்டும், அஞ்சோம்! சுடட்டும், அதற்கும் அஞ்சோம்! இவற்றால் ஏற்படும் தழும்புகள் திராவிடத் தனி அரசுக்கு முத்திரையாக அமையும். தலைவருக்கு நமது அஞ்சாமை பற்றிச் சந்தேகமில்லை.

நமது பொறுமையைக் குறித்துத்தான் சந்தேகம். எனவேதான் அவரிடம் கொஞ்சம் தயக்கம் காணப்படுகிறது. தயக்கம் வேண்டாம்!

பொறுமை மிக்க தமிழர்

தமிழர்கள் எந்த அளவுக்கு உரம் படைத்தவர்களோ அந்த அளவுக்குப் பொறுமையும் படைத்தவர்கள்தான்.