பக்கம்:அறவோர் மு. வ.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

185


அளிக்கின்றன. நல்லவர்களின் பொதுத்தொண்டும் இதில் கலந்து கரைந்து போகிறது. சமுதாய அமைப்பிலும் தேர்தல் முறையிலுமே ஒரு புது மாறுதல் வந்தால் தான் இந்த நோய் தீரும்."

எனவே டாக்டர் மு.வ. அவர்கள் ஒரு புத்துலகம் காண விழைகிறார். அந்தப் புத்துலகத்தின் அமைப்பினைப் பின்வருமாறு காண்கின்றார்:

“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனி வரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில் சிக்குண்டவர்கள்... இனி அவர்களை அந்தக் கடலில் தத்தளிக்க விடும் கொடுமை இருக்காது. பொருட் போராட்டம் ஒழிந்து வாழ்க்கையில் அறப் போராட்டம் ஒன்றே நிற்க வேண்டிய அமைப்பே புத்துலக அமைப்பாகும்."

"அறத்தைக் காக்கத் துணை செய்யும் என்று போற்றிய அந்த நெருப்பு - பணம் - இன்று வாழ்வையே பற்றி எரித்துக் கொழுந்து விட்டு ஓங்குகின்றது; அற நாட்டத்திற்கே இடமில்லாமல் செய்து விடுகின்றது. போகட்டும்; பழைய சமுதாய அமைப்பு மறைந்து சாம்பலானால், புதிய சமுதாய அமைப்பு ஒன்றைக் காண மக்களால் முடியும். அந்த அமைப்பில் பணம் இருக்கும்; பணவேட்டைக்கு இடம் இருக்காது. அறம் வாழும்; அறநாட்டம் அடிப்படையாக அமையும். பணம் அறத்தின் அடிப்படையில் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வாழ்க்கை திருந்தும். அன்றுதான் விமானங்களில் வானில் பறக்கக் கற்ற மக்கள், கப்பல்களாலும் நீர்மூழ்கிகளாலும் கடலில் நீந்தவும் மூழ்கவுங் கற்ற மக்கள், நிலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும் என்பதை மெய்ப்படுத்துவார்கள்; பணம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/188&oldid=1239585" இலிருந்து மீள்விக்கப்பட்டது