130
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
சிரிக்கும் பொழுது பற்களை பீறிக் கிளம்பும் வெண்மை நிற ஒளியொத்தக் ‘குருக்கத்திப் பூ'; மலர்ந்து மணம் பெறுகிறது.
பண்தேரே! காதல் என்ற மன்னன் உன்னைக் கண்ணுற்ற பின்தான், நீ கன்னிப் பெண்களை வேட்டையாடப் புறப்படுவதாகத் தமிழ் இலக்கியங்களிலே படித்திருக்கிறேன். நான்.
வெண்ணிலா உனது குடை! வசந்தம் அமைச்சன்! உன் புகழேற்றும் இசைவாணர்கள் குயில்களாமே!
பலாச மலர்கள் உனது வில்லா? வட்டமிட்டொலிக்கும் வண்டினங்கள் நாணா? மாந்தளிர்கள், அம்புகளா உனக்கு?
ஆகா! உன் பெருமையை எப்படிச் சாற்றுவேன் இளங்காற்றே!
தென்னலே! காதல் மன்னன் உன்னைக் குஞ்சரமாக ஊர்ந்து பவனி வருகிறானாமே!
சபாஷ்! யானையின் பலம் உனக்குண்டோ! அப்போது உன் மதிப்பு உரைக்கவொணாததன்றோ.
தென்றலே! நீ பிறந்த இடத்தை விட்டு வருகிறபோது மலர்க் காடுகளைக் காண்கிறாய்!
காவைக் கண்டிருப்பாய்! கன்னல் - செந்நெல் காடுகளையும் பார்த்திருப்பாய்!
அல்லி உன்னைக் கண்டு சிரிக்குமாம்! தாமரை என்ற அரசியல் நோயாளிகள் அச்சத்தால் கூம்பி விடுவார்களாம்! ரோஜா ஆலவட்டம் வீசுமாம்! மல்லி மஞ்சம் விரித்திருக்குமாமே - உனக்காக. இது உண்மைதானே இன்பக் காற்றே!
ஆஹா.... ஹா! உன் அழகே அழகு! அழகு சிரித்தாடும் மலர்களையே, நீ தன் வயப்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்திருக்கிறாயே! என்னே உன் ஆற்றல்! அன்பு! பண்பு!
வரும் வழியில் இத்தனை இயற்கை அழகுகளைக் கண்டு புளகாங்கிதமுற்ற நீ, அதோ இருக்கும் அந்த இருண்ட காட்டில் நுழைந்தாயா?