பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

165



எனது வயல்கள், முட்டாள்களின் சிந்தனையைப் போல சாவியாகச் சாய்ந்து கிடக்கின்றன.

கதிர்மணிகளில் சப்பட்டை நெற்களே மிஞ்சியிருக்கின்றன. இந்த லட்சணத்தில், எனக்கு வண்ணம் தோய்த்த நீர்க் கமிழி உருவமா அம்மா!

அதோ, கரும் இருளில் பேய்க்காற்று என்னை அடித்துச் செல்கின்றது!

வழி காட்ட ஒரு மின்மினிப் பூச்சி கூட என்னுடன் வரவில்லையே!

பனித்துளிகளை உண்டு வாழும் வெட்டுக்கிளியின் இயற்கைப் படபடப்பைத் தவிர, வேறு குரலேதும் கேட்கவில்லையே!

நத்தையின் உதடுகள், கிளிஞ்சல்கள் மேல் போகும் போது ஏற்படுகின்ற சப்தத்தைத் தவிர, நான் எதையும் கேட்க முடியவில்லை!

கனவு கண்டு எழுந்த புறாக்களின் முனகலைத் தவிர - வேறு எந்த அசரீரியும் கேட்கவில்லையே!

தொட்டிலில் நீ பாடிய பாட்டை, நான் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கின்றேன்!

அவை, கவனத்தின் கூடாரத்திற்கு வரவே, ஆண்டுகள் பல பிடிக்கும் போல் இருக்கிறதே!

உனது இனிமையான அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள என் செவிக் கதவுகள், திறந்தே இருக்கின்றன.

அவற்றில், அவலத்தின் ஆரவாரத்தைத் தவிர - வேறெதுவும் கேட்கவில்லை.

அம்மா! இதோ நான் உடற்குன்றி, இப்போது இரண்டு கற்களுக்கிடையே, நுழைகின்றேன்.

அக்கற்கள், எதேச்சாதிகாரத்தின் பிடியைப் போல், இறுக்கமாக என்னைப் பிடிக்கின்றன.