பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


சக்தியின் துவக்கத்திற்கும் முடிவுக்கும்; எந்தக் காலத்திலும் கட்டுப்படாதது 'காலம்'.

தோன்றி முடிந்த அண்ணாவுக்குப் பண்புத் தொடராக பண்புத் தொகையாக அது எப்படி அமைகிறது?

இது எனது புலமையின் திறன் என்றே நினைத்து எழுதுகின்றேன்.

விதியின் விரிசலில் வைதிகத்தால் தவறி விழுந்தவன் நல்லகாலம் கெட்டகாலம் என்று, காலத்திற்கு எல்லை கட்டுகிறான்.

வாழ்க்கையைப் பகுத்தறிவின், நாத்திகக் கட்டுக் கோப்பில் வளர்த்துக் கொண்டவன், காலத்தை அறிஞரோடு இணைத்து - உலகத்தைக் கணக்கிடுகிறான்.

கிறித்துவை முன் வைத்துத் - தன்னை ஒளியூட்டிக் கொள்கிற காலமும் உண்டு.

புத்தனை விதையாக வைத்து, வளர்ந்து-விருட்சமான காலமும் உண்டு.

நபிகள் நாயகத்தை மூலமாக வைத்து - முளைத்தக் காலமும் உண்டு.

வள்ளுவப் பெருமானை வைத்து, வாழ்ந்து, வளர்ந்து-மென் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்ற காலமும் உண்டு.

விவேகம் விளைந்தவர்கள், மேற்குறிப்பிட்ட மேதைகளை விழுங்கிய காலத்தை, வாழ்த்தியதில்லை.

அப்படிப்பட்ட ஊழிப் பெருமக்களை விழுங்கிய அதே காலம் - அவர்களை எருவாக வைத்தே-எப்படி இன்றைய தினம் வரை வளர்ந்து கொண்டே வருகிறது?

தர்க்கரீதியான வினா இதுவென்றால், இதே கேள்வி அண்ணா விஷயத்திலும் எட்டிப் போய்விடவில்லை.

எழுதி முடித்த ஒரு கட்டுரையை, இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் படித்தால், அது பழையதாகத் தோன்றும்.