பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

47



அவரைப் பிறப்பித்தவன் - அவரை இறப்பித்தான்,

அவரைச் சிறப்பித்தவன் - அவரைச் சிறை பிடித்தான்.

அவரை வரப்படுத்தியவன், மீண்டும் வரவேற்றுக் கொண்டான்.

அவரைக் கறைபடுத்தியவர்கள் - கரைந்து கொண்டே செல்கிறார்கள்.

ஆண்டுக்காண்டு நம்முடைய கண்கள், அவரை நினைத்துக் குடம் குடமாகக் கண்ணிரைக் கறந்தாலும்,

காலமாகிவிட்ட அண்ணா -

நெஞ்சில் நீங்காக் கோலமாகிவிட்ட அண்ணா -

மனிதர்க்கும் மனிதத்திற்கும் பாலமாகிவிட்ட அண்ணா

மனத்திற்கும் மனசாட்சிக்கும் சீலமாகிவிட்ட அண்ணா

ஒரு முடியாத கதை,

விடியாத இன்பம்,

நொடியாத வாழ்க்கை,

'இந்த இதய எழுச்சி எழுத்துக்களின்' மையப் புள்ளியே, காலத்தின் நீண்ட கரங்களால் செதுக்கப்பட்ட மனிதத் தேர், நல்ல வாழ்க்கை என்ற சுற்றுலா முடிந்த பிறகு,

மூல விக்ரகத்தின் முன்னால் நிற்கிறது என்றே பொருள்.

அண்ணா இறந்த காலமுமல்லர் - நிகழ்காலமுமல்லர் - எதிர்காலமுமல்லர்!

அழகிய காற்று, பொருள் புரியவில்லையா?

'கால்' என்றால் காற்று 'அம்' என்றால் அழகியது,