பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



அண்ணா கூடத் தம்பிகளை-அறிவுப் பிரவாகத்தில் கலக்கச் சொன்னார்.

கிடைத்த ஒளியில் பிரகாசிப்பதைவிட - கிடைக்கப் போகும் ஒளிக்காக வாழ்க்கையை அமைப்பதே; அண்ணாவின் கொள்கை.

விழுந்து விட்டோமே என்று; நீர்வீழ்ச்சி, மலையுச்சியைப் பார்க்கிறது.

நீ, இன்னும் விழுந்து விடவில்லை! வழிந்து கொண்டிருக்கிறாய் - என்று; உச்சி உரைத்தது:

நான் அவ்வளவு நெடியவனா? நீர்வீழ்ச்சி கேட்கிறது!

இறவாது வடிபவன் நீ; என்று உச்சி கூறியது

என்னுடைய முடிவு எப்போது? நீர்வீழ்ச்சி கேட்கிறது!

உன்னுடைய தொடக்கமே எனக்குத் தெரியாதே - மலையுச்சி சொல்லிற்று.

தொடங்கியது முடியத்தானே வேண்டும்! நீர்வீழ்ச்சி கேட்கிறது.

எது முடிகிறதோ அது தொடங்கும் என்றது உச்சி!

ஆகவே, நீ முடியவில்லை - உனக்குத் தொடக்கமில்லை.

அப்படியானால் நான் யார்? நீர்வீழ்ச்சி கேட்டது.

அருள் முளைக்கும் வேருக்கும் ஆணிவேர் நீ!

பொருள்புரிய வைக்கின்ற புதியதோர் தத்துவம் நீ!

ஒளியிருந்த முட்டைக்குள்,

உருவாகி நின்ற கருவுக்குள்

நித்தியத் தீனியாகி,

நிர்மல வெளியாகி,

நின்ற சக்திக்கு

நீ தானே முதல்வித்து!

புரியவில்லையே! கேட்டது நீர்வீழ்ச்சி!