பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




'மீளவழி தேறாமல்,

பூண்ட அன்புச் சிறைக்குள்ளே

பூட்டப்பட்டிருக்கும் வரலாற்றைக் கண்டாயா?

இத்துணையும் அறியாத நீ. கரு நீலம் மாயை என்றால், கை கொட்டி நகையாதோ தரணி!

அறிவை மாயம் என்போன் - 'அது' இலான் தம்பி ; அது இலான்!

ஆழத்தின் நிறங்காட்டும் கரு நீலம் மாயமில்லை என்பதை நீ உணர்ந்து, உன்னைத் தெளிவாக்கி நட என்று கூறி முடித்தது குவளை மலர்.

பைங் கூழ்!

இச்சித்தப் பொருள் யாவும் எட்டிச் சென்று விட்டதால் அவற்றை மாயை என்கிறான் மானிடன்!

பச்சைப் பைங்கூழ்கள் பார்த்த பின் கூட, இச் சரக்கை எப்படித்தான் நீ அவிழ்த்தாய்? இவ்வாறு வினாவெழுப்பிக் கிண்டல் குறும்பவிழ்த்து நகைத்தது நல்கூழ்!

இக்கரைக்கு அக்கரைப் பச்சையென்று, அறிவு திக்கற்ற மூளையெல்லாம் இயம்பிற்று.

அதைக் கேட்டு விட்டு, பச்சை நிறம் அழியும் என்கின்ற பசப்பு வார்த்தையினால், இச் செகத்தை ஏய்ப்பவர்கள் இருக்கின்றனர்!

அஃதே போல் நீயும் நினைத்து விட்டாயோ, தம்பி!

கடலிலே காய கல்பமுண்டு - கருமேகம், பெருநிலத்தால் காதலித்துப் பொழிகின்ற காதல் மழை; பருவமழை!

மேகத்திற்கும் - பூபாகத்திற்கும் ஏற்பட்ட திருமணத்தின் பயனாகக் கழனி கருவுற்றாள்.

நாற்று தவழ்ந்தது! நெல்லாய் வளர்ந்தது.

பச்சை நிறத்தோடு, பாயும் தென்றலுடன், கை கொட்டிச் சிரிப்பதைக் கண்டான் - ஏராளன்!