பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

91



இறகு இருந்த இடத்தை, இன்னொன்று நிரப்ப முடியாதல்லவா?

இறகுகள் இவ்வாறு உதிர்ந்தால், பிறகு கொக்கு பறக்க முடியுமா அம்மா!

கர்வம் கூடாது தாயே, கொக்குக்கு!

நான் ஆட்டுவதாலேயே இறகாய் இருக்கின்றாய் என்றால், இழிந்த இடத்துக்கு என்னை அனுப்பாதே அம்மா!

ஒரு நாள் கொக்கு உயரே பறந்தது என் பக்கத்திலே இருந்த இறகு ஒன்று உதிர்ந்துவிட்டது:

அளவுக்கு மீறிய உயரத்தில் சென்றது கொக்கு!

உதிர்ந்த இறகை அது உதாசீனம் செய்துவிட்டது!

தருணம் பார்த்துக் கொண்டிருந்த புயல், உதிர்ந்த இறகு இருந்த இடத்திலே - நுழைய ஆரம்பித்து விட்டது.

இறகுகள் மேலும் சில உதிர ஆரம்பித்தன!

பறக்க முடியாமல் கொக்கு வானத்தில் தள்ளாடியது:

நான் அப்போது அந்தக் கொக்கைப் பார்த்து நவின்றேன் -

கொக்கே! உன்னை உயர ஏற்ற இறகுகள்தானே காரணம் - என்றேன்!

ஆமாம், என்று தலையசைத்தது கொக்கு!

அதற்கு நிலை தடுமாறும் போதுதான், என் நினைப்பே வருகிறது!

அதுபோல, ஒர் அமைப்புக்கே தொண்டர்கள்தாம் காரணமென்று என் மூலம் அறிவிக்கின்றாயா அம்மா?

கொக்கின் ஆரம்ப காலத்தில் முளைத்தது இறகு!

ஒர் அமைப்பின் ஆரம்ப காலத்திலிருப்போரும் தொண்டர்கள் தாமே!

கொக்கு, இறகின்றி பறக்காது! முடியாது!