60
அறிவியல் திருவள்ளுவம்
என்றில்லை. ஒரே நோய்க்குப் பலவகை மாத்திரைகள்: இவற்றுடன் நீரிய மருந்துகள், ஊசி மருந்து கொடுக்கப்படும் நிலையை நோக்கும்போது திருவள்ளுவர் மருந்துகள் என்று எதிர்காலத்தை நோக்கிப் பதிந்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகின்றது. நோயும், பல மருந்துப் பொருள்களும் பல என்றவர், மருந்து வேண்டாம் என்றதற்குக் காரணம் பல சொல்லவில்லை. ஒன்றுதான் சொன்னார்.
'அருந்தியது அற்றது' என்று இரண்டையும் தனித் தனியே ஒருமையில் சொன்னமை அவர்தம் ஆழ்ந்த கருத்தை அறிவிக்கிறது.
'அற்றது' என்பது வயிறு ஒரு உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ளதைக் குறிக்கும். எனவே, வரும் முன் காக்கும் முறை அறிமுகமாகிறது. இதில் "போற்றி உணின்', என்பதில் 'போற்றி' என்றால் 'பாதுகாத்து' என்று பொருள். வெற்று வயிற்றினைப் போற்ற மறு உணவு இடவேண்டும். அந்த உணவு பாதுகாப்புக்குரிய உணவாக வேண்டும். எனவே இங்கு. சொன்ன போற்றி உணல் அடுத்தடுத்த குறட்பாக்களில் விளக்கம் பெறுகிறது.
'அற்றது:போற்றி'யைத் தொடர்ந்து 'அற்றல் அறிந்து' உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும்.
அதனைக் கடைப்பிடித்து,
"மாறு அல்ல துய்க்க;
துவரப்பசித்துத் துய்க்க"(494)
என்றார். இதில் மாறு அல்ல என்றது போற்றுதலின் விளக்கம்.