கோவை. இளஞ்சேரன்
61
இதனையே தொடர்ந்து
"மாறுபாடு இல்லாத உண்டி" என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,
"மறுத்து உண்ணின
ஊறுபாடு இல்லைஉயிர்க்கு" (945)
என்றார்.
"அற்றது போற்றுதல்". "அற்றது அறிதல்", "மாறு அல்ல துய்த்தல்", "பசித்துக் துய்த்தல்", "மாறுபாடு இல்லாமை", "மறுத்து உண்ணல்"-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; "மருந்து வேண்டா" என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.
"ஊறுபாடு இல்லை உயிர்க்கு"-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.
இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை 'உடலியல்' இதனுடன் இணைந்த துறை 'உணவியல்'. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் 'சீருணவு' (Balanced Diet) இன்றியமையாதது. 'காப்புணவு' (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . 'ஒழுங்கான உணவு' (NormalDiet). உடலியக்கத்தை சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துக்களாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.