பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

81

இக்காலச் 'செல்வப் பொருளியல்' நாட்டு அரசாட்சியின் பங்கில் செயலாகும்போது பின்வரும் முறை கொள்ளப்படும்.

பண்டமாற்றுப் பொருளாக நாணயத்தையோ பணத் தாளையோ அரசு வெளியிடும்போது அவற்றின் மதிப்புடைய பொன்னோ, வெள்ளியோ பொருளோ, கடன் ஆவணமோ அரசின் இருப்பில் வைக்கப்படும். அவ்வாறு செய்வதுதான் பணவீக்கத்தை ஏற்படுத்தாது. பண மதிப்பைச் சரியாமல் உரிய மதிப்புள்ளதாக வைத்திருக்கும். (அண்மைக் காலமாக இம்முறை கடைப்பிடிக்கப் பெறாமல் பணவீக்கம் நேர்ந்து பணமதிப்பு குறைந்து வருகிறது).

இவ்வாறு ஒரு நாடு பொருளின் செலாவணிக்கேற்ற இருப்பைப் பெற்றிருக்கவேண்டும். நாட்டின் இலக்கணம் கூறும் திருவள்ளுவர்.

        "பெரும்பொருளால் பெட்டக்கதுஆகி,அருங்கேட்டால்
        ஆற்ற விளைவது நாடு" (732)

என்று விதித்தார். இக்குறளில், ‘நாட்டிற்குப் பெரும்பொருள் வேண்டும்; அது பெட்டக்கதாக ஆக வேண்டும்' என்றவை கூர்ந்து காணத்தக்கவை. பெரும் பொருள் என்றது நாட்டு மக்கட்கும், உயிரினங்கட்கும் வேண்டப்படும் பொருள்களின் நிறைவாகும்.

"பெட்டக்கது" என்னும் சொல் திருவள்ளுவரின் தனி ஆக்கச் சொல். இதற்கு 'விரும்பத்தக்கது' என்று பொது வான பொருள் கண்டனர். இதற்குத் தனியான ஆழ்ந்த சிறப்புப் பொருள் உண்டு.

‘பெட்பு-தக்கது' என்பவற்றின் கூட்டுச்சொல் "பெட்டக்கது" "பெட்பு" என்பதற்குப் "போற்றிப்