பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



3. உயிரியல்

இன்று டார்வின் போன்ற அறிஞர்களால் குறிப்பிடப் பெறுவது கூர்தல் அறம் (Theory of Evolution) என்ற கொள்கையாகும். இக்கொள்கைபற்றி இன்னும் அறிவியலறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இல்லாமல் இல்லை. இத்தகைய கொள்கை போன்றதொரு கருத்தினை,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாப் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”58[1]

என்று மணிவாசகப்பெருமானும் கூறுவர்.

பலராமன் பிறப்பு : ஏழாவது முறை கருவுற்ற தேவகி கம்சனுக்குப் பயந்துகொண்டிருந்த போது அக்கருவில் வளர்ந்து பிறக்கும் குழவியைக் கம்சனிடமிருந்து தப்புவிக்க வேண்டும் என்பது எம்பெருமானின் திருவுள்ளம். ஆகவே, அக்கரு வசுதேவனின் மற்றொரு மனைவியாகிய ரோகிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டுப் பலராமனாய்ப் பிறந்தது. இவனே கண்ணனுக்கு மூத்த பலராமன்; சங்க இலக்கியங்களில் ‘நம்பி மூத்தபிரான்’ என்று குறிப்பிடப்பெறுபவன் இவனே. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு (புதியது புனையும் ஆற்றல்) புராணத்தில் ‘கதைபோல்’ அடங்கிக்கிடக்கின்றது.

இதனை, இக்காலத்து மலட்டுப்பெண் கருத்தரிப்புடன் ஒப்பிட்டு நோக்கலாம். ‘மலடி வயிற்றில் ஒரு மகன் போலே; புதையல் எடுத்த ஒரு தனம் போலே’ என்பது ஒரு திருப்புகழின் அடிகள். புதையலில் தனம் கிடைத்தல் நடைபெறக்கூடியது. சிலருக்குக் கிடைத்ததாகவும் செய்தி உள்ளது. ஆனால், ‘மலடிக்கு மகன் பிறத்தல்’ என்பது சொல்லளவில்தான் இருந்து வந்தது. இன்றைய அறிவியல் இதனையும் மெய்ப்பித்துவிட்டது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த


  1. 58. திருவா. சிவபு. அடி 26-31.