பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


இருமுட்டைகள் கருவுறுவதால் உண்டாகும் இரட்டையர் இருகரு இரட்டையர் (Fraternal twins) வழங்கப்பெறுவர். இவர்கள் சகோதர இரட்டையர் எனவும் வழங்கப்பெறுவர். சாதாரணமாய், மாதத்திற்கு ஒரு முட்டைதான் முதிர்ந்து கருக்குழலில் செல்லும்; சில சமயங்களில் இரு முட்டைகள் (இரு சூற்பைகளிலிருந்து?) முதிர்ச்சியுற்றுச் சூற்பைகளிலிருந்து வெளிப்பட்டுக் கருக்குழலில் (Pellopion tube) செல்வதுண்டு. ஒவ்வொரு முட்டையிலும் ஒவ்வொரு விந்தணு புகுந்து இரு முட்டைகளும் கருவுறும். இவ்வாறு கருவுற்ற முட்டைகள் கருப்பையில் (Womb) வெவ்வேறு இடங்களில் பதிந்துகொண்டு வளரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பனிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க்கொடியும் (Umbilical cord), தனித்தனி நஞ்சும் (Placenta) இருக்கும். இவ்வாறு பிறக்கும் இரட்டைக் குழவிகள் உருவம், தன்மை, உயரம் முதலானவற்றில் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும் என்பதில்லை; ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் அமையலாம்; அல்லது இரண்டும் ஆணாகவோ, பெண்ணாகவோ அமையலாம். இரு முட்டைகளின் திறக்கோல்கள் பிரியும் பொழுது இரண்டனுடைய நிறக்கோல்களும் ஒரே மாதிரி அமையும் என்று சொல்வதற்கில்லை. ஒரு முட்டையில் தாய்வழிப் பாட்டனிடமுள்ள திறக்கோல்கள் அதிகமாகவும், மற்றொன்றில் தாய்வழிப் பாட்டியிடமுள்ள நிறக்கோல்கள் (Chromosomes) அதிகமாகவும் அமையலாம். மேலும், இந்த இரு முட்டைகளும் வெவ்வேறு முறையில் அமைந்த நிறக்கோல்களைக் கொண்ட இரு தனிப்பட்ட விந்தணுக்களரல் கருவுறுகின்றன. இதனால்தான் இவை பல பண்புக் கூறுகளில் வேற்றுமையுடன் அமைகின்றன. இதனால்தான் நிறம், உரோம வளர்ச்சி, உயரம், உறுப்புகளின் அமைப்பு, தோற்றம் முதலானவற்றில் சாதாரணமாய் சகோதர, சகோதரிகளிடம் காணப்பெறுவதைப் போலவே இவையும் வேறுபாடுகளுடன் அமைகின்றன.

கருவுற்ற முட்டையிலுள்ள உயிரணுக்களின் தொகுதி இரு பகுதிகளாகப் பிரியும்பொழுது முற்றிலும் இரண்டாய்ப் பிரியாமல் போகுமாயின் இயல்பிகழ்ந்த இரட்டைகள்