இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
வாழ்வை அளக்க வேண்டியது, சிந்தனையாலும் செயலாலும்—காலத்தால் அல்ல.
—ஸர் ஜான் லுப்பாக்
மாட்சிமை மிக்க ஒரு மணி நேர வாழ்வு, நற்சாட்சியம் சொல்லப் பேரில்லா யுகத்திற்குச் சமம்.
—சார்ல்ஸ் மார்டான்ட்
வருவது வரட்டும்,
நேரமும் மணியும் ஒடி,
இருள் கவியும் நாளும் கடந்து சென்று,
நெருகல் ஆகி விடும்.
—வில்லியம் ஷேக்ஸ்பியர்
வாழ்க்கை, வாழ்வதில்தான் உள்ளது ஒவ்வொரு நாளின், மணியின், இழைமத்தில் உள்ளது என்ற உண்மையை, காலம் கடந்த பின் தான், நாம் உணர்கிறோம்.
—ஸ்டீஃபன் லீக்காக்
காலம், பெரிதும் அரிதானது, உத்தமச் செயல்களைச் செய்து காலத்தைப் பயன்படுத்தும் மனிதன், மதிப்பு மிக்கவன்; ஒரு சமயம் கடந்து விட்ட காலம், ஒரு போதும் திரும்பாது.
—ஸ்ரீமத் ராஜேந்திர சூரி