பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 அறிவியல் பயிற்றும் முறை 1. முன்னறிவு : தாவரங்கள் திறமையுடன் இல்லறம் நடத்தி விதைகளே உண்டாக்கு வதை மாளுக்கர்கள் அறிந்திருத்தல். சில வினுக்களைக்கொண்டு இதனை அறிதல். - 2. மாட வளர்ச்சி : முதல் கில (தொடக்கம்): ஆசிரியர் அடியிற் காண்பவை போன்ற சில விளுக்களை விடுத்து மானுக்கர்களின் முன்னறிவினச் சோதித்தல் வேண்டும். - (அ) தாவரங்கள் விதைகளே ஏன் உண்டாக்குகின்றன : (ஆ) எல்லா விதைகளும் தாய் மரத்தின் அடியிலேயே விழுந்தால் என்ன நேரிடும் ? (இ) தாவரங்கள் செழிப்பாகவும் வளமாகவும் வளர்வதற்கு விதைகள் என்ன செய்ய வேண்டும் ? . . . . . . இரண்டாம் கிலை (விதைகள் பரவுதல்): இயற்கையில் விதைகள் பரவுவதற்கு அமைந்துள்ள சாதனங்களே வகைப்படுத்தி விளக்குதல். சிறு வினுக்களால் மாளுக்கர்களிடமிருந்தே அவற்றை வருவித்து வகைப்படுத்தலாம். காற்று: (அ) எருக்கன் காய் வெடித்தால் அதிலுள்ள விதைகள் எவ்வாறு பரவுகின்றன ? (ஆ) அது மாதிரி காற்றில்ை பரவக்கூடிய வேறு தாவர விதை கள் யாவை ? . . மானுக்கர்கள் இலவம், பருத்தி, தங்கரளி, மூக்குத் திப் பூண்டு என்று பல விடைகளைத் தரலாம். ஆசிரியர் தணுக்கு, ஷோரியா, வேங்கை முதலியவற்றின் விதைகளுக்கு இறகுகள் உண்டென்றும், அவற்றின் மரங்கள் உயரமாக இருக்கும் என்றும், அவற்றிலிருந்து விதைகள் தொப் என்று விழாமல் காற்றில் சுழன்று நெடுந்தொலைவில் சென்றுவிடும் என்றும் கூறுதல் (மாதிரி விதைகளைக் காட்டுதல்). பிராணிகள் : (அ) வேப்பம் விதைகள் எவ்வாறு பரவுகின்றன ? (ஆ) நாவறபழம், ஆலம்பழம்-ஆகியவற்றின் விதைகள் எவ்வாறு பரவுகின்றன ? - (இ) ஆமணக்கு, குண்டுமணி எவ்வாறு பரவுகின்றன ? இம்மாதிரியான வினுக்களே விடுத்துத் தக்க விடைகளை வருவிக்க லாம். சதைப்பற்றுள்ள பழங்கள் தின்னப்பெற்று வேறு இடங்களில் துப்பப்படுதல் ; எச்சமிடப்படுதல் , ஆமணக்கு, குண்டுமணியைப் பூச்சிகள் என்று எண்ணிப் பறவைகள் விழுங்கி விடுதல் ; எச்சத்தால் வெளி வந்து பரவுதல். நாயுருவி, நெருஞ்சி, தேள் கொடுக்கு, ஒட்டடைப்