பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 . அறிவியல் பயிற்றும் முறை ,.........^^^^^^^^^ வேண்டும். எனவே, அறிவியல் சோதனைகளில் ஒரு தடவையில் ஏதாவது ஒரு கூறினே மட்டிலுந்தான் மாற்றல் வேண்டும். அப்படிச் செய்தால் தான் சோதனை முடிவுகளில் ஏதாவது மாற்றம் காணப்பட நேர்ந்தால், எந்த கூறினுல் அது விளைந்தது என்று திட்டமாகக் கூறுதல் முடியும். அளவாலும் பண்பாலும் தேவையான அளவு எடுகோள்களேத் திரட்டிய பிறகு, அவற்றை ஆராய்ந்து முடிவு காண்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். حامی جمع مربعاعم خمینی 4. தகவல்கள், எடுகோள்கள் விளக்கம் : தகவல்கள், எடுகோள்கள் ஆகியவற்றைக்கொண்டு அதுமானித்தலே மூன்று வகையாக மேற் கொள்ளலாம். அவை : விதிவிளக்கு முறை, விதிவரு முறை, ஒப்புநோக்கு முறை என்பன. எந்த முறையை மேற்கொண்டாலும், அதுமானித்தல் காரண காரிய முறையையொட்டி இருத்தல் வேண்டும். அதுமானித்தல்வில் மேற்கொள்ளும் செய்திகள் சரியானவையாக இருத்தல் வேண்டும்; அதுமானத்தை விழிப்புடனும் கையாளுதல் வேண்டும். கல்வி அறிஞர்கள் மானுக்கர்களிடம் சிந்தனையை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே, அறிவியல் கற்பித்தலில் இதைச் சீரிய முறையில் கவனிக்க வேண்டும். சிந்தனே ஆற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட திட்டமான திறன் அன்று. அதில் பல்வேறு திறன்களும் வினேயாண்மைகளும் அடங்கியுள்ளன. ஆகவே, தகவல்கள் முதலியவற்றைக் கொண்டு சிந்தனையைச் செலுத்தி விளக்கம் தருவதற்கு முன் சிந்தனையைப் பல்வேறு கூறுகளாகப் பகுத்துக்கொண்டு வகுப்புச் சூழ்நிலைகளுக் கேற்றவாறு அவற்றை எவ்வாறு அனுகுதல் வேண்டும் என்பதைக் கருதுதல்வேண்டும். சிந்தனையில் கீழ்க்கண்ட திறன்கள் அடங்கியுள்ளனவாகக் கருதலாம்: (1) பகுத்துப் பார்க்கும் திறன் : ... " . (2) கடந்த செயலேயும் சங்கற்பத்தையும் வேறுபடுத்தி உணரும் திறன் ; - {3} எடுகோள்களிலுள்ள இ ைய பு: ண் ைம ைய யும் இயை பின்மையையும் பகுத்தறியும் திறன் : 44) எடுகோள்களில் அடிப்படையாகவுள்ள சங்கற்பங்களேக் கானும் திறன் ; 3. . (5) எடுகோள்களைச் சீர்தூக்கி அவற்றில் ஒரு பொதுமை கண்டு விதிகளே உண்டாக்கும் திறன் : - (6) உற்றுநோக்கிக் கண்டவற்றின் அடிப்படையில் காரணங்களே கிறுவும் திறன் ; r (7) நிறுவிய காரணங்களின் அடிப்படையில் பலன்களே முற்கூறும் திறன் :