54
28. பூப்பனவற்றின் வகைகள் யாவை?
1. உறையில் விதையுள்ளவை - பூவரசு.
2. உறையில் விதையில்லாதவை - சளம்பனை.
3. இரு விதையிலைத் தாவரங்கள் - பூவரசு.
4. ஒரு விதையிலைத் தாவரங்கள் - தென்னை.
29. பூவாதனவற்றின் வகைகள் யாவை?
1. தண்டுடையன - பாசிகள், பூஞ்சைகள்.
2. மாசித் தாவரங்கள் - மாசிகள்.
3. பெரணித் தாவரங்கள் - பெரணிகள்.
30. பூக்குந் தாவரங்கள் யாவை?
தாவர உலகின் பெரும்பிரிவு. இதில் உறையில் விதையுள்ள தாவரங்கள் (மா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் அடங்கும்.
31. விதைத் தாவரங்கள் என்பவை யாவை?
உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள்.
முன்னவை விதையுறைத் தாவரங்கள் - தென்னை.
பின்னவை விதையுறையிலாத் தாவரங்கள் - சளம்பனை.
32. உறையில்விதையில் தாவரங்கள் என்றால் என்ன?
பூக்குந் தாவரங்கள். விதைகள் உறையில் இல்லாதவை. எ-டு. ஈச்சை போன்ற சளம்பனை.
33. புவித்தாவரம் என்றால் என்ன?
தரைக்குக் கீழுள்ள அரும்புகள் மூலம் மேல் வளரும் தாவரம். இவ்வரும்புகள் தண்டுக்கிழங்கு, குமிழம், குமிழ்க்கிழங்கு, வெங்காயம்.
34. தாவரப் பருவக்காலத்தின்படி அதை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1. ஒருபருவப்பயிர்கள் - நெல்.
2. இருபருவப் பயிர்கள் - முள்ளங்கி
3. பலபருவப் பயிர்கள் - கத்தாழை.
4. பல்லாண்டுத் தாவரங்கள் - தாளிப்பனை.
35. ஒரு பருவத்தாவரம் என்றால் என்ன?
தன் வாழ்க்கைச் சுற்றை ஓராண்டில் நிறைவு செய்யும்