பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



இவ்வுலகில் எளிய வகை உயிரிகள் எவ்வாறு பல வழிகளில் பல காரணிகளால் படிப்படியாக மாறி அரிய வகை உயிர்களைத் தோற்றுவித்தன என்பதை விளக்கும் கொள்கை.

3. உயிர்மலர்ச்சி நடைபெறுவதை நிலைநாட்ட உதவும் சான்றுகள் யாவை?

1. நிலவியல் சான்றுகள்
2. உருவியல் சான்றுகள்
3. கருவியல் சான்றுகள்
4. உடலியல் சான்றுகள்

4. இயற்கைத்தேர்வு என்றால் என்ன?

வாழ்க்கைப் போராட்டம் என்று தார்வின் கூறிய முறை. இதற்கேற்பத் தம் சூழ்நிலைக்குக் குறைந்த தகைவுள்ள உயிரிகள் அழியும். நிறைந்த தகைவுள்ளவை வாழும். தார்வின் கொள்கைப்படி வேறுபட்ட மக்கள் தொகையில் தன் செயலாண்மையை நிகழ்த்தி உயிர் மலர்ச்சியை உருவாக்குகிறது.

5. தார்வின் கொள்கை என்பது யாது?

உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. தார்வின் 1858இல் முன்மொழிந்தது. ஐன்ஸ்டீன் கொள்கை போன்று காலத்தால் அழியாதது. இயற்கைத்தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொள்கையின் கூறு. இதன்படி வலுவுள்ளவை வாழ்தல்; வலிவற்றவை வீழ்தல்.

6. இயற்கைத் தேர்வு மூலம் உயிர்மலர்ச்சி நடைபெறுகிறது என்பதை யார் எப்பொழுது அறிவித்தனர்?

1858இல் தார்வினும் ஆல்பிரட் வாலசும் அறிவித்தனர். லின்னேயிஸ் கழகத்திற்கு இதைத் தெரிவித்தனர்.

7. சிறப்பினங்களின் தோற்றம் என்பதைத் தார்வின் எப்பொழுது வெளியிட்டார்?

1859இல் வெளியிட்டார்.

8. மனிதன் தோற்றம் என்னும் நூலைத் தார்வின் எப்பொழுது வெளியிட்டார்?