92
அணுகுவது நல்லது.
140. துயில்நடை என்றால் என்ன?
தானாக இயங்கும் நரம்புத்தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் தூக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்தபின் அவர்களுக்கு அவை பற்றிய நினைவு வராது.
141. நாட்துயில் என்றால் என்ன?
ஒரு நோய் அல்லது குறைபாடு. பகலில் தூங்க விரும்பும் உந்தல் முனைப்பாக இருக்கும்.
142. குரல் குறை என்றால் என்ன?
குரல் நாண்கள் அல்லது குரல் வளை நோய். வலிப்பு நோயினால் குரலிழப்பு ஏற்படுதல்.
143. இரவு சிறுநீர்க்கழிவு என்றால் என்ன?
சிறுநீரகக் கோளாறு. தானாகவே சிறுநீர் கழிந்து படுக்கை நனையும்.
144. செரியாமை என்றால் என்ன?
உண்ட உணவு நொதிகளின் செயலுக்கு உட்படாததால், ஏற்படும் செரிக்காத நிலை. உண்ணா நோன்பே சிறந்த மருந்து.
145. நேர்மூச்சு என்றால் என்ன?
ஒருவர் நேராக நிற்கும்பொழுது மட்டுமே மூச்சு விடக் கூடிய நிலை.
146. இறுகுநோய் (சிரோசிஸ்) என்றால் என்ன?
ஓர் உறுப்பின் நோய் நிலை எ-டு கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி, அதற்குப் பதில் நார்த்திசு உண்டாகும். இதனால் அடிவயிறு பருத்துக் காணப்படும்.
14. மருந்துகள்
1. மருந்தியல் என்றால் என்ன?
மருந்தினை ஆராயுந்துறை. மனிதனிடத்து மருந்துகள் உண்டாக்கும் விளைவுகளை ஆராய்வது.