பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


உட்கரு

5. இதிலுள்ள பொருள்கள் யாவை?

நிறப்புரி, மரபணு, டி என் ஏ, ஆர் என் ஏ.

6. தனிக்கண்ணறைகளால் பிரிக்கப்படாத என்பது எதைக் குறிப்பது?

ஒற்றைக் கண்ணறை உயிரி அமீபா.

7. நுண்புரிகள் என்பவை யாவை?

கோல்கை உறுப்பு, அகக் கனிய வலைப்பின்னல் ஆகியவற்றில் துண்டுகள்.

8. மையப்புரி என்றால் என்ன?

நுண்ணிய உருளை வடிவப் பொருள். உட்கருப்படலத் திற்கு வெளியே உள்ளது. இழைப்பிரிவிலும், குன்றல் பிரிவிலும் கதிர் முனைகளை உண்டாக்குவது.

9. கோல்கை அமைப்பு என்றால் என்ன?

விலங்கணுக்களில் மைய உறுப்பைச் சுற்றியுள்ள பொருள். 1898 இல், காமிலோ கோல்கை என்பார் கண்டறிந்தது. செல் கரப்புக்குக் காரணமானது.

10. தற்சிதைவு என்றால் என்ன?

உயிரணுக்கள் இறந்தபின், அவற்றின் நொதிகளாலேயே அவை அழிக்கப்படுதல்.

11. நுண்பிளப்பு என்றால் என்ன?

உட்கரு முதலிய நுண்பொருள்களை நுண்ணோக்கியில் பிளக்கும் நுணுக்கம்.

12. குற்றிழை உயிரிகளில் காணப்படும் இரு உட்கருக்கள் யாவை?

பெருவுட்கரு, சிறுஉட்கரு. எ-டு பரமேசியம்.

13. குறுக்குக்கலப்பு என்றால் என்ன?

குறுக்கு தோன்றுவதன் வாயிலாக அதன்மூலம் ஒருபடித்தான நிறணியன் கருக்களிடையே ஏற்படும் பொருள் பரிமாற்றம். இவ்வரிய நிகழ்ச்சி கண்ணறைப் பிரிவில் நடைபெறுவது.

14. இதனை யார் எவ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்?

இதனைப் புகழ் வாய்ந்த அமெரிக்க உயிரியலார் மார்கன்