பக்கம்:அறிவியல் விருந்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புவிப் பயணம் jo உலகினைச் சுற்றி வந்து கொண்டிருந்த செயற்கைத் துணைக் கோள்கள் கைகொடுத்து உதவின. விண்வெளி வீரர்கள் இருவரும் நிலவுலகிற்குத் திரும்பு கையில் அம்புலியில் நினைவுக் குறிப்பாக ஒரு பலகையை வைத்து விட்டுத் திரும்பினர்! அதில், "பூவுலகில் போத்த மனிதர்கள் இங்குத்தான் அம்பு லிமேல் முதலில் அடிவைத்தனர். கி.பி. 1969- சூலை மக்கள் குலம் முழுவதற்கும் அமைதி கானகத்தோம்’ என்ற செய்தி பொறிக்கப்பெத்துள்ளது, அப்போலோ 1 விண்வெளி வீரர்கள் மூவரும் ஒரே வரியில் கையெழுத் திட்டுள்ளனர். ஒவ்வொரு கையெழுத்தின்கீழும் அவர் களது பெயர்கள் அச்செழுத்துகளில் பொறிக்கப் பெற்றுள் எ.ை விண்கல விலகிர்களின் கையெழுத்திற்குக் கீழே அமெரிக்க க்கள் அதிபரின் கையெழுத்து உள்ளது. இதற்குக் கீழே ஒரு வரியில் 'அமெரிக்க அதிபர்” என்று அச்செழுத்தில் பொதிக்கப் பெற்றுள்ளது. 22.9. செ.மீ. நீளமும் 19.4 செ. மீ அகலமும் உன்ன அந்தப் பலகையின் உச்சியில் கிழக்கு, மேற்குப் பகுதிகட்கு அறிகுறியாக இரு கோளங்கள் பொதிக்கப்பெற்றுள்ளன. மேற்குப் பகுதிக் குரிய கோளத்தில் பொறிக்கப்பெற்றுள்ள ஒரு புள்ளி அப்போலோ 11 செலுத்தப் பெற்ற கென்னடி முனையைக் காட்டும். இதனைத் தவிர இந்தியா உட்பட 73 நாடுகளின் செய்திகளும் அங்கு வைக்கப்பெற்றன; அமைதிக்கடல் : என்ற இடத்தின் இவை வைக்கப்பெற்றன. மேலும் விண் வெளி வீரர்கள் "அம்புலிக்கு ஒரு கடிதம் கொண்டு சென்றனர். ஒரு கோளிலிருந்து பிறிதொரு கோளுக்கு அஞ்சல் கொண்டு செல்லும் முதல் அஞ்சல் சேவகர்கள் இவர்களே யாவர். ஒரு பெரிய முத்திரை குத்துக்