பக்கம்:அறிவியல் விருந்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குடிவழியும் சூழ்நிலையும் குழந்தையைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அவர்கள் கல்வி பற்றிய ஆராய்ச்சியிலும் எழும் முக்கிய பிரச்சினை களுள் ஒன்று குடிவழி, சூழ்நிலை" ஆகியவை பெறும் பங்கு ஆகும். இதில் இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார் குழந்தைகளின் வளர்ச்சி, ஒழுக்கம், நடத்தை முதலியவை அவர்கள் பெற்றோரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் பெறும் நிலையான சில கூறுகளால் முற்றிலும் அறுதியிடப் பெறுகின்றன என்று கூறுவர்; இவற்றை எவற்றாலும் அசைக்க முடியாதென்று வாதிப்பர். பிறிதொரு சாரார் இவை யாவும் குழந்தைகள் சூழ்நிலையில் பெறும் வாய்ப்பு களைப் பொறுத்தவை என்று சாற்றுவர்; சூழ்நிலையினால் அனைத்தையும் கைவரச் செய்யக்கூடும் என்று சாதிப்பர். இங்ங்ணம் குடிவழிக்கும் சூழ்நிலைக்கும்-இயற்கைக்கும் வளர்ப்புக்கும்-இடையே நடைபெறும் எதிர் வழக்கில்" இருசாரார் கூறும் காரணங்களையும் சிறிது ஆராய்வோம்: 'குடிவழிக் கட்சியினர் கூறுவது: குடிவழி என்பது ஒரு குழந்தை தன் முன்னோர்களிடமிருந்து பெறும் மெய்ப் பண்புகளும் மனப்பண்புகளும் ஆகும். இதனால் குழந்தை உடலமைப்பில் தன் தாய் தந்தையரைப் போல் இருப்பதன் தி, விருப்பு வெறுப்புகளிலும், திறன், அறி திறன்களிலும் பழக்கத்திலும் ஒழுக்கத்திலும் அவர்களை ஒத்துள்ளது என்பர். தாயைப்போல பிள்ளை, நூலைப் 1. Go. Aft–Heredity. 4. Gp sữ–3 kili 2, 3%ffo-Environment. 5. popsis-Intelligence , srsti*augšG-Controversy,

  • }

5