பக்கம்:அறிவியல் விருந்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் §l உச்சியிலிருந்து ஒலி ய ைல க ள் தம்மையடைகின்றன. சாதாரணமாக இந்த மின்வெட்டு ஒர் ஒழுங்கற்ற பாதை யிலேயே செல்லுவதால், காற்றலையின் இயல்பில் திடீ ரென்று மாற்றங்கள் நிகழலாம். இதனால் "கிடுகிடு. இடுகிடு...” என்று உருண்டு அதிர்த்து உறுமிச் செல்லும் இடிமுழக்கங்கள் நேரிடுகின்றன. மலைகள் அல்லது கட்ட உங்கள் இவற்றினின்று உண்டாகும் எதிரொவிகள் இவ் னொலி முழக்கத்தைப் பின்னும் நீடிக்கச் செய்கின்றன. மின்னல் என்பது பேராற்றல் வாய்ந்த மின்பொறியே என்பது இன்றைய அறிவியலின் கருத்து. இதனை முதன் முதலில் ஆராய்ந்து அறிந்தவர் பெஞ்சமின் ஃபிராங்க்லின்' (1706-1790) என்ற அமெரிக்க அறிவியலறிஞர். மின்னல் மின்சாரத்தால்தான் தோன்றுகிறது என்பதை இவர்தாம் முதன் முதலாக மெய்ப்பித்தார். தம் கொள்கையை திலைநாட்டுவதற்காக அவர் 1752 இல் அறிவியல் வரலாற் றிலேயே பெரும் புகழ்பெற்ற சோதனைகளுள் ஒன்றாகிய இம் சோதனையை மேற்கொண்டார். ஒரு பட்டுத் துணி யால் மூடப்பெற்ற காற்றாடி யொன்றினைச் செய்து அதன் உச்சியின்மீது ஒரு கம்பியினை இணைத்தார். காற்றாடியினின்றும் வரும் ஒரு நீண்ட நார்க்கயிறும்" ஒரு ஒரு பட்டு தாடாவும் இணைக்கப் பெற்ற இடத்தில் ஒரு சாவி பொருத்தப்பெற்றது. இடிமழையுண்டாகும் பொழுது இந்தக் காற்றாடியைப் பறக்கவிடத் திட்டமிட்டார் ஃபிராங்க்வின். அண்மையில் பின்னல் தாக்கும்பொழுது சரக்கயிற்றின் வழியாக மின்சாரம் பாயுமாதலின் ஃபிராங்க்லின் சட்டத்தின் கயிற்றின் வழியாக மின்னூட்டம் பாயும் என்று எதிர் பார்த்தார். ஆனால், சோதனை 11. Quégolf); 31%g tričišosis-Benjamin Franklin. £2, strifăsuñg- Linen thread. శ్రీ-డీ