பக்கம்:அறிவியல் விருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூாவிற்றுக் குடும்பம் 豁翼 இறங்குகின்றது. திரும்பிச் செல்லும் இந்த இயக்கம் வக்கரித்தல்' என்று வழங்கப்பெறும், இறுதியில் ஒரு நாள் மேற்கு அடி வானத்தில் மறைந்தே போய்விடுகின்றது. அதன் பிறகு இரண்டு வாரங்கள் வரையில் இதனை நாம் பார்ப்பது இல்லை, இதனை நாம் சுக்கிர மூடம் என வழங்குகின்றோம். இக்காட்சி ஆறு திங்கள் வரை நடை பெறும். மூடம் முடிந்த பிறகு வெள்ளி, ஞாயிறு எழுவ தற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அடிவானத்தில் கிழக்குத் திசையில் காணப்பெறுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல இது வானத்தில் உயர்ந்துகொண்டே வருகின்றது. உயர்ந்த நிலையை அடைந்த பிறகு (ஒரு பனை உயரம்), மீண்டும் நாளுக்கு நாள் கீழே இறங்கி இறுதியில் ஒருநாள் கதிரவனது ஒளியில் கலந்துவிடுகின்றது. புதனைப்போலவே இதுவும் ஞாயிற்றுக்கு மேலும் கீழுமாக ஒர் ஊசலியைப் போல்" ஆடிக்கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கருகில் இருக்கும்போது (அஃதாவது கதிரவனுக்கும் பூமிக்கும் இடையிலிருக்கும்பொழுது) அதன் தொலைவு 2 கோடி 60 இலட்சம் மைல்களாகும்; இஃது எதிர்ப்பக்கம் போகும்போது இதன் தொலைவு 150 கோடி மைல்களாகும். இது பூமிக்கு அண்மையிலிருக்கும்பொழுது இதன் இருண்ட பின்புற அசைக்கோளமே பூமியை நோக்கி உள்ளது. எனவே, அந்த நிலையில் இது நமக்குப் புலனாவ தில்லை. வெள்ளி பூமியை விட்டுச் சேய்மையில் செல்லுங் கால் இதன் மீது பகலவன் ஒளி விடும் பகுதியின் குறுக்களவு சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டே செல்லும். பூமிக்கும் சுக்கிரனுக்கும் இடையே உள்ள தூரம் அதிகரித்து வருவதனால் நாம் காணும் அதன் பருமனும் வரவரன் 22. Goossflá; d-Retrogade motion. 23, ¢sa ¢ 6õ\ - Perdwlum,