பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


“ஆமாம் நாயக்கரே, உம்மிடந்தான்—அது கேட்க வந்தேன்” என்று ஒரு சங்கதியைச் சொல்லி, “இதற்கு என்ன செய்யலாம்—என்று ஆலோசனை கேட்டார்,

“எனக்கும் கூடச் சிக்கலாகத்தான் தோன்றியது"பெரியார் ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல்,

“இப்படிச் செய்தால் என்ன?” என்றார். அதற்கு ஆவர்.

அதை நானுல் யோசித்தேன் நாயக்கரே. அப்படிச் செய்தால், பொதுஜனங்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?—என்று திரும்பக் கேட்டார்.

அதற்குப் பெரியார்பொது ஐனங்கள்—என்ற சொல்லை மற்றவர்கள் யாரும் சொல்லலாம்; தாங்களும் நானும் (அதை) நினைக்கலாமா?"—என்று கேட்டார்.

உடனே இராஜாஜி—அப்ப சரி என்று எழுந்து போய்விட்டார்

இந்த உரையாடலின் கருத்து—எனக்குப் பெரு வியப்பை உண்டுபண்ணியது.

—தங்களைத் தவிர வேறு எவரும் பொது ஜனம் என்று இல்லை—தங்களின் கருத்துத்தான்—பொதுஜன வாக்கு—நாம்தான் பொதுஜனங்களை உண்டாக்கு வின்றோம்—என்பது அதன் முடிவு. —

அதுதான், நான் கற்றுக்கொண்ட அரசியலின் முதல் பாடம்.