இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.
‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்’—என்று நிமிர்ந்து பேசினார்.
இதற்கு மூன்று பொருள்—
கால்வழி நீர்: 1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்
2. தாம் குடித்த எச்சில் நீர்
3. கால்வழியே விரும் சிறுநீர்.
சொன்னவரோ பெரியவர்! கேட்டவரோ சிறியவர்! வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.
‘தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்’ என்று பேசத் துணிந்தார்.