பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


இப்படியாகப் பெயரும் புகழும் பரவிக் கடுக்காய் வைத்தியனுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அவ்வூர் அரசனும் வைத்தியனை அழைத்துப் பாராட்டிக் கெளரவித்தான்.

இதைக் கேள்விப்பட்ட மற்றொரு வைத்தியர் இவரிடம் வந்து “உங்களுக்கு எப்படி வைத்திய ஞானம் வந்தது? இவ்வளவு குறுகிய காலத்தில் பெயரும் புகழும் கிடைத்தது?” என்று கேட்டார்.

கடுக்காய் வைத்தியர் சொன்னார்

‘இளம் பெண்டாட்டிக்காரனுக்கும் எட்டுக்கடுக்காய்

‘எருமை கெட்டவனுக்கும் எட்டுக் கடுக்காய்’

‘படை எடுத்த மன்னனுக்குப் பத்து கடுக்காய்’

என்று தனக்குப் புகழ்வந்த விதம் அவ்வளவுதான் என்று தன் கதையைக் கூறினார்.


77. இரு குரங்கின் கைச்சாறு

பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான்.

‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது.

இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான்.