பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார்—

‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர்.

அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று—

ஏணிமரத்தின் மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கிறான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணிமரததைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

சற்றுநேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை “ஆணி இறங்கவில்லையா? கான்கிரீட் சுவரா?—” என்ன? என்று கேட்கவே,

“மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகிறேன்.” என்று சொல்வி, மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்க ஆரம்பித்தான்.

ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தவன், நன்றாக மேலே பார்த்துவிட்டு “கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே” என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்துவிட்டு சொன்னான். “என்மேல் தப்பில்லை, ஆணி கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டைலையும் கொண்டை இருக்கவேண்டிய இடத்தில் கூர்மையையும் சிந்திக்காமல் வைத்துவிட்டான், சுவற்றில் இது எப்படி இறங்கும்” என்றான்.