இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்
- காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
- பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
- மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
- கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
- கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,
இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது—அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.
அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி — நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது
அதுநெடுஞ்சாலை வழி —
அந்த ஊர்ப் பக்கத்து — பணக்காரர் ஒருவர் — சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.