இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
90
அறிவுக்
486.அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி, அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை.
கார்ப்பெண்டர்
487.மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும்.
தோரோ
488.மகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் “முதல் மனைவி கதீஜாவிட முள்ளதைவிட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?” என்று கேட்டபொழுது அவர் "இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை, என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.
கார்லைல்
489. அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும்.
ஜார்ஜ் எலியட்
490.துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது?
பர்ன்ஸ்