தனிப்பாடற் பகுதி. 83
முருகக்கடவுள் மீது கிந்தாஸ்து கி.
அப்பன் இரந்துண்ணி யாத்தாள் மலைநீலி ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தான்ுக்கிங் எண்ணும் பெருமை இவை. 8
விகடராமன் குதிரையைப் பற்றிப் பாடிய ஆசிரியம்.
முன்னே கடிவாளம் மூன்றபேர் தொட்டிழுக்கப் பின்னே இருந்திரண்டு பேர்தள்ள-எந்நேரம் வேதம்போம் வாயான் விகடரா மன்.குதிரை
மாதம்போம் காத வழி. 9.
போவாள் வருவாள் புகுவாள் என்று பாடுகவெனப் பாடியது.
செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீாவாள்-மற்றையவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவாளவா ளாம். 10
பொன்னவரை இலை காய்பூ எனப் பாகெவெனப் பாடியது.
உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் றன்னுல் எடுத்ததுவும் பள்ளிக் கியையப்-படுத்ததுவும் அங்கா ளெறிந்ததுவும் அன்பின் இறந்ததுவும் பொன்ன வரையிலேகாய் பூ. | 1