பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 அறிவுநூல் திரட்.ே

திருவாங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி

திாைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டென்

கண்ணினேகள் என்றுகொலோ களிக்கும் நாளே? விற்றுவக் கோட்டம்மான் விஷயம். தருதுயரங் கடா யேலுன் சானல்லாற் சரணில்லை விாைகுழுவுமலர்ப்பொழில்சூழ் வி ற்றுவக்கோட்டம்மானே! அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும்-மற்றவள்தன் அருள்கினந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே, மீன் நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா!-என் பால் நோக்கா யாகிலுமுன் பற்றல்லாற் பற்றிலேன் கான்நோக்கா தெத் தயாஞ் செய்திடினும்-தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே. 2: வெங்கட்டிண் களிறடர்த்தாய் விற்றுவக் கோட்டம்மானே! எங்குப்போ யுய்கேன்! உன் இணையடியே யடையலல்லால் எங்கும்போய்க் காைகாணு தெறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே. 3. எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைபோல் மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா என் சித்தமிக வுன்பாலே வைப்ப னடியேனே. 4. கண்ணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு. மன்னுடிகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கைக் கோன்முடிகள் சிகதுவித்தாய்! செம்பொன்சேர். கன்னிகன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ. 5.