பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26


63B.

வகையறிந்து தொண்டத் தொகைவிரித்த தந்தம் நம்பியாண்டார் நம்பி நலத்தாள்கள் போற்றி
தொண்டர்சீர் விரிவெலாம் கண்டமா தவர் சிவ
பாக்கியப் பயனாம் சேக்கிழார் பெருமான்
சிறந்தநன் னலந்தரு திருந்தடி போற்றி
போற்றி போற்றி அரன் திருப் புகழே.

திருச்சிற்றம்பலம்.


வா ழ் த் து


வாழி அறுபத்து மூவர் மலரடிகள்
வாழியிப் பாமாலை மண்ணுலகில்-வாழியவே
இந்நூல் வரச் செய்த என்னிளவல் தன்கிளையோ
டெந்நாளும் இன்புற் றினிது.