பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பேராசிரியர் திரு. வெள்ளைவாரணனாரும் அன்று இவருடன் படித்தவர். படிப்படியாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என்னுடன் புலவர் படிப்புத் தொடர்ந்து நான்காண்டு படித்து வித்துவான் பட்டமும் ஆசிரியப் பயிற்சியும் பெற்று ஆசிரியர் பதவிக்கு உரியவரானர். இந்த உயரிய நிலைக்கு வழித்துணையானவர் நகரா மலை வித்துவான் இராம லிங்கம் பிள்ளை அவர்களே . இராமநாதபுரம் "சுவாட்ஸ் ஹைஸ்கூல்” என்ற ஓர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராய் இரண்டரை ஆண்டு வேலையும் பார்த்தார். தந்தையார்க்குச் சிறிது ஆசை ஏற்பட் டது. மைந்தன் பெருமை கண்டு உள்ளத்தில் மகிழ்ந்து வரலானார். திருமகள் நாட்டம் : கல்வித்துறையில் எல்லை கண்ட பிள்ளை அவர்கட்குத் திருமகள் அருளும் தேடி வருகிறது. வாழ்வில் ஒர் திருப்பம். திடீர் மறுமலர்ச்சி, பிள்ளையவர்கட்குப் பெரிய தந்தையார் ஒருவர் ஒரத் தூரில் பெருந்தனக்காரராய் விளங்கினர். அவர் பெயர் சிவசிதம்பரம் பிள்ளை. அவர் மனைவியார் இராசாம்பாளாச்சி. எல்லாச் செல்வமும் பொலிய விளங்கி யவர்கட்கு மக்கட் செல்வம் இல்லாத ஓர் குறைதான். அரும்பை நாடிச் செல்லும் சுரும்புபோல நெருங்கிய உறவினர் பலர் அவரைச் சூழ்ந்து வரலாயினர். தன்னேயே வளர்ப்புப் பிள்ளேயாக ஏற்றுக்கொள்வா ரென எண்ணியவர் பலர். சிவசிதம்பரம் பிள்ளையவர் களோ யாரிடத்தும் முகமலர்ந்து பேசமாட்டார். வந்த வர்கள் யாரிடத்தும் அன்புகாட்டவில்லை. இப்படியே பலரும் வந்துபோனார்கள். அவர் உள்ளத்தை யாரும் அறிய முடியவில்லை. பொருள் கருதி அவர் வீட்டுக்குச் செல்லாதவர் குஞ்சிதபாதம் பிள்ளை ஒருவரே,