பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 "என் போல்வார் சிந்தையினும் என் புழி உம்மை, தமது தாழ்வுணர நின் றமையின் இழிவு சிறப்பு ; 'சிறைவான் புனற்றில் இலச் சிற்றம்பலத்து மென்சிந்தை யுள்ளும்’ என்புழிப்போல. எளிய திதுவன்றே யேழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆவா-ஒளிகொள்மிடற் றெந்தையராப் பூண்டுழலு மெம்மானே யுண்ணினேந்த சிந்தையராய் வாழும் திறம். 46 இ-ள் : ஒளி திகழும் நீலகண்டத்தையுடைய எமது தந்தையும் பாம்பினே அணிகலகைப் பூண்டு உலவும் எம்பெருமானும் ஆகிய இறைவனே ஆழ்ந்து தியானிக்கும் உள்ளமுடையவர்களாய் வாழும் முறை யாகிய இது, அவனருளேப் பெறுதற்கு மிகவும் துணை புரியும் எளிய நெறியல்லவா ? இங்ங்னமாகவும் ஏழை மக்களாகிய நீவிர் சிறிதும் அன்பில்லாதவராகவும் அறிவில்லாதவராகவும் உள்ளீர். நுமது செய்கை ஐயோ இரங்குதற்குரியதேயாம் எ-று. "சிந்தையராய் வாழும் திறமாகிய இது எளியது அன்றே" என இயைத்துரைக்க. இங்ங்னம். பாட்டின் இறுதியிலுள்ள தொடர் மு. த ல டி யி ன் முதல் தொடரோடியைந்து பொருள் கொள்ள நிற்றலின் இது பூட்டுவிற் பொருள்கோள். இது எளியது அன்றே என் புழி ஏகாரத்தை வினவாகக் கொண்டு இஃது எளியதல்லவா? எளிதேயாம் எனப் பொருளுரைக் க. இனி, அன்றே யென் புழி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொண்டு, எம்மானே உள் நினைந்த சிந்தையராய் வாழும் திறமாகிய இது எளியதன்று மிகவும் அரிதே யாம் எனப் பொருள் கூறுதலும் உண்டு. யாதும்சிறிதும். ஆஆ-ஐயோ, இரக்கக் குறிப்பு.