இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்று பாருங்கள்!” என்றாள். அவன் அவ்விதமே குனிந்து தாழிக்குள்ளே பார்த்தான். உடனே, அவன் கூக்குரலிட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்து, துள்ளிப் பாய்ந்தான். அவனுக்கு ஏற்பட்ட அச்சத்தில், அவன் வெளியிலேயே ஓடிப் போயிருப்பான். ஆனால், மார்கியானா அவனைத் தடுத்து, “தாழிக்குள்ளே இருப்பவன் உங்களுக்குத் தீங்கு செய்யக் கூடிய நிலைமையில் இல்லை! அவன் செத்து, மரக்கட்டை போல் விறைத்துக் கிடக்கிறான்!” என்றாள். அலிபாபா. “எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து நாம் தப்பியிருக்கிறோம்! இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்று தெரியவில்லையே!” என்று கூறினான்.
மார்கியானா, “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது! எல்லா விவரத்தையும் நான் உங்களுக்குப் பிறகு