பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

சூரசம்ஹாரம் ; 163

அவன் கண்கள் கொழுந்து விட்டெரிந்தன.

‘குறவள்ளி சேர் குன்றனைய தோளா !”

“சபாஷ்!”

அவனைத் தூக்கி அறையில் எறிந்து கதவை இறுக்கி மூடி வெளியே பூட்டினர்.

வெளியில் கூச்சலும், கலவரமும், சத்தமும் வர்ணிக்க சாத்தியமில்லை!

சக்திவேலுக்கு ஆச்சரியத்தால், கண்கள் சற்று மலர்ந்தன. சூரனைக் கொன்ற பிறகுகூட, தேவர்கள் இன்னும் முறையிடுவானேன்! அவனுக்குப் புரியவில்லை.