பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

மந்த்ரஸ்தாயி & 193

பாலில் க்ரீம் கூடாது. வெண்ணெய் எடுத்த மோர்தான் அனுமதி. எண்ணெய்ப் பண்டங்களை விஷமாய் விலக்குங்கள். No வதக்கல்ஸ் All boiled only. கண்ணனும் சொல்கிறான். “அப்பா, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு உங்களுடையது. என் மேல் பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.”

ஆனால் அவன்தான் இப்போது பால் ஏடை ஊட்டு கிறான்.

அந்த நாள் ஞாபகம் வருகிறது. அதை மறக்கவே முடியாது.

நான் சுகமாய் சுவரில் சாய்ந்து கொண்டு டிவி. பார்க்க தலையணைகளை என் முதுகுக்கு அண்டக் கொடுத்துவிட்டு, மாட்டுப் பெண்ணும் அவனும் சாப்பிடப் போனதும் அந்தச் சமயத்தின் சூழலில், என் மகன், மருமகளின் பிரியத்திலும் பணிவிடையிலும் திளைத்த மனது, உலகத்தில் எதனோடும் சமாதானமாயிருந்த அந்த நேரத்தில்-இது நிலைக்குமா என்று அதன் பரிபூரணத்தில் சந்தேகம் துளிர்த்த அந்தப் பொடி வேளையிலேயே-திடீரென்று மார்புள் இரண்டு இடிகள்-அடுத்தடுத்து இரண்டு சம்மட்டி அடிகள் (என்ன Voltage? அப்பா அதுவே போதும்) நான் கலைந்து குலைந்து கலகலத்துப் போனதுதான் தெரியும்.

“இது heart attack இல்லை. கண்டிஷன் நார்மலாய்த் தான் தெரிகிறது. ECG ஒண்ணும் தப்புக் காட்டல்லே. கொஞ்சம் Slow Beat அவ்வளவுதான். அது பெரிய குத்த மில்லை. ஒருவேளை mild strain. மறுபடியும் வந்தால்