பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

நான்

அவனவன் வாழ்க்கை வெறும் தகவல் சேகரிப்பு அல்ல. தான் தான் தனியாக மற்ற உயிர்களினின்று, தன்னைத் தனக்கு இஷ்டமோ இல்லையோ தனி முறையில் இயங்கிக் கொண்டு, புதுப்புது உறவுகளைக் கண்டு கொண்டு ஜன்மா என்கிற அந்தஸ்துக்குத் தன் வழியில் மெருகு சேர்த்துக் கொண்டு தன் வேளை வந்ததும் மடியும், அல்ல மறுபடியும் தோன்ற மறையும் உயிர்த்தாது. இந்த முறையில் வாழ்வின் விவரம் சரித்ர வ்யாபகம் பெறுகிறது. ஆனால் இந்தப் பக்கங்களில் எனக்கு அனுமதித்திருக்கும், அல்லது நான் எடுத்துக் கொண்டிருக்கும் இடவிலாசம், விசாலத்துள் சற்றுக் கணிசமேயான என் ஆயுசின் விவரங்களை முழுக்க வும் திணிக்க இயலாது. ஆகவே ஆங்காங்கே என் வாழ்க்கை யின் திருப்புமுனைகளாக வாய்த்த சம்பவங்களை, சந்திப்பு களை எண்ணச் சிதர்களை, உரசல்களை தருணங்களைத் தொட்டுக்காட்டி, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன். இப்படி யும் ஒரு கண்ணோட்டம், எடைக்கணம், கோர்வை கிடைக்கும் என்கிற எதிர்நோக்கில் இதோ..

ஆறு அறிவுடன் பிறவியெடுத்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சரித்ர புருஷன் சரித்ர ஸ்திரி. மனித பரம்பரையின் சரித்ரத்துக்குத் தன் பங்கைச் சேர்க்க வந்திருக் கிறான்வந்திருக்கிறாள்.